என் அன்பு மக்கா...
பிறந்தநாள் வாழ்த்து
🌹🌹🌹❤️🌹🌹🌹
உறவுகளோடு
உன்னை இணைத்துக்கொள்
உண்மைகளோடு
உன்னைப்
பிணைத்துக்கொள்
புத்தகங்களோடு
உன்னைப்
புதைத்துக்கொள்
மகிழ்ச்சியான வாழ்வில்
உன்னை
விதைத்துக்கொள்
அதற்கு முதலில்
மூடநம்பிக்கைகளை உன்னிலிருந்து
சிதைத்துக் கொல்.
எதையும் கேள்வி கேள்
எதற்கும் பதில் தேடு
கல்வியைக் காதலி
காதலைக் கற்றுக்கொள்.
வெள்ளையாக இருப்பதும்
வசதியாக இருப்பதும்
அல்ல
அழகு
உண்மையாக இருப்பதும்
உழைத்துப் பிழைப்பதும் தான்
அழகு.
பிறரிடம் நீ ஏற்றுக்கொள்வதையே
பிறருக்காக நீயும் செய்
எல்லாரோடும் மகிழ்ந்து சிரி
உண்மை
இல்லாரோடு இகழ்ந்து பிரி
உன்னால் தெளிவாக விளக்க முடியாததை -
நீ இன்னும் புரிந்து
கற்றுக் கொள்ளவில்லை
உன்னால் திடமாக சாதிக்க முடியாததை -
நீ இன்னும் முறையாகப்
பயிலவில்லை.
எல்லாவற்றையும் -
ஐயத்தில் தொடங்கு
அறிவில் பயணி
விவாதித்துப் பழகு
உத்தேசமாகச் சிந்தி
ஆலோசித்து முடிவெடு
அன்பில் முடித்திடு.
அறிவியலோடு ஒட்டாத எதையும் ஏற்றுக்கொள்ள
மறு
அது அன்பின்பாற்பட்டதாக இருந்தால் மட்டும் கொஞ்சம்
பொறு
அன்பையும் அறிவியலையும்
இரு கண்களாகக் கொண்டு
இரு.
❤️❤️❤️🌹❤️❤️❤️
என்றென்றைக்குமான எனது
அடுத்த தலைமுறைக்கான
பிறந்தநாள் வாழ்த்து செய்தி இது
No comments:
Post a Comment