Monday, 24 March 2025

தமிழ்ச் சோகை

தமிழைப் படிக்க எழுத பேச தெரிந்திருந்தும்
தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தாண்டி
தமிழில் அறிவியலையும் வரலாறையும் சமூகத்தையும் 
படித்தறியும் வாகற்ற ஒரு தலைமுறை உருவாகி கண்முன்னே நிற்கிறது.

காலந்தோறும் வரும் கருவிகள் தோறும் ஏறியதால் 
வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மொழிக்கு ஏற்பட்டிருக்கும் 
ஆகப் பெரும் சோகம் எதுவெனில்
இளைய உதிரத்தில் ஏற்பட்டுள்ள 
தமிழ்ச் சோகை

No comments:

Post a Comment

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.  பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன.  பண்பாடு தான் மனிதனைப்  பண் பாடவும் வைக்கிறது.